குஷியில் தமிழக ஊழியர்கள்.. இரட்டிப்பாகும் தீபாவளி முன்பணம்.. அரசின் சூப்பர் உத்தரவு!
கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு பண்டிகைக்கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
பண்டிகை முன்பணம்:
தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இது போன்ற பண்டிகை காலத்தில் மாத ஊதியத்துடன் பண்டிகை முன்பணம் வழங்குவதும் வழக்கமான ஒன்று. அவ்வாறு பெறப்படும் முன் பணத்தை பயன்படுத்தி தீபாவளி பணிடிகையை கோலாகலமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது முன் பணம் வழங்குவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது. அதில் பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
கூட்டுறவு விற்பனை இணைய அரசு அதிகாரிகள், பிற அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.13,000/- முன்பணம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை உயர்த்தி கூட்டுறவு விற்பனை இணைய அரசு அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், பிற அதிகாரிகள், பணியாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், உதவியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயாகவும் முன்பணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உச்சத்தை தொட்ட ‘ஆம்னி பஸ்’ கட்டணம் – அதிரடி உயர்வால் அவதியில் பயணிகள்!!
Exams Daily Mobile App Download
தஞ்சை கூட்டுறவு விற்பனை இணைய பணியாளர்களுக்கு முன்பணம் 20 ஆயிரத்தில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாகவும், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பணியாளர்களுக்கு 15 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்