தமிழகத்தில் ஜன.26ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் வரும் ஜன.26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனால் அன்றைய தினம் மதுபான மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய உத்தரவு மது பிரியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்:
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜன.26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது இந்தியாவில் நாட்டிற்கான சட்டம் இயற்றப்பட்டு ஏறுக்கொள்ளப்படத்தை நினைவு கூறும் வகையில் ஜன.26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தினம் இன்னும் சில தினங்களில் அதாவது ஜன.26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜன.26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3 ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட வேண்டும்.
மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்றும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசின் இத்தகைய உத்தரவை மீறி மதுபான கடைகள் திறப்பவர்கள் மற்றும் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் இத்தகைய டாஸ்மாக் மற்றும் மதுபான கடைகள் மூடல் உத்தரவு மது பிரியர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.