இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ராஜீவ் குமார் தேர்தல் அறிவிப்புகளை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
டாஸ்மார்க் மூடல்:
நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகள், மதுபார்கள் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தது. மேலும், விடுமுறை குறித்து டாஸ்மாக் ஊழியர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
தேர்தலுக்கு பின்னரும் ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடுகள் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
தற்போது மக்களவை வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி அன்றும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் எதிர்பாராத அசம்பாவித நிகழ்வுகள் மற்றும் கலவரங்களை தவிர்க்கும் பொருட்டு இந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கமாகும்.