நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்தான புதிய அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் 18 வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
DRDO ACEM நிறுவனத்தில் 41 காலியிடங்கள் – Engineering முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
அதில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடியும் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். அதாவது உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல ஜூன் 4-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இன்றி பணம் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.