நாட்டில் ஆர்கானிக் பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு – மத்திய மந்திரி அறிவிப்பு!
சிக்கிம் மாநிலத்தில் கேங்டாக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இதில் நாட்டில் இயற்கை சார்ந்த வேளாண் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆர்கானிக் பொருட்கள்
நாட்டில் தற்போது வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் துறைக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தில் கேங்டாக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
இதில் அவர் தெரிவித்துள்ளதாவது, சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பாக அதிக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய இயற்கை பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துளளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் நாட்டில் இயற்கை சார்ந்த வேளாண் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை, 1 மில்லியன் டாலர்களிலிருந்து 1 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை வரும் 2030ம் ஆண்டுக்குள் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.