தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக காரணங்களுக்காக 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இடமாற்றம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் எவ்வித சேர்க்கை கட்டணம் இன்றி 2021 – 2022 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து முதல் கட்டமாக 9 – 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தீவிரமடையும் கொரோனா, முழு ஊரடங்கு அறிவிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
அடுத்தகட்டமாக நவம்பர் 1 முதல் 1 – 8 வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூடுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளது. ஆனாலும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது – அரசு அறிவிப்பு!
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பொது இடமாற்றம் குறித்த ஆலோசனை முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு சில நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள வகுப்பு- lll ஐ சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதன் சார்ந்த பணியிடங்களில் பணி புரிபவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தற்போது நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.