தமிழகத்தில் இன்று (நவ.24) மூன்று மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (நவ. 24) தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை (நவ.25) கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு விரைவில் 8 வது ஊதியகுழு அமல் – மத்திய அரசு திட்டம்!
மேலும் நவ. 26 முதல் நவ. 30 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ. 27 ஆம் தேதி மற்றும் நவ. 28 ஆம் தேதியில் வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.