அரசு ஊழியர்களுக்கு விரைவில் 8 வது ஊதியகுழு அமல் – மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் 8வது ஊதிய குழுவை விரைவில் அமல்படுத்துவது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெளியான அப்டேட்
இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 7வது ஊதியகுழு அறிவிக்கப்பட்டது. அதன் பின் 2016 ஆம் ஆண்டு இக்குழு அமலுக்கு வந்தது. வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு மாற்றப்படும். அந்த வகையில் ஊழியர்கள் மத்தியில் 8 வது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த ஊதிய குழு அமலுக்கு வந்தால், ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு உயரும், ஊழியர்களின் சம்பளமும் 44.44 சதவீதம் உயரும் என்பது குறிப்பிடதக்கது.
தமிழக பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!!
இந்நிலையில் ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்தல் வர இருப்பதால் இந்த புதிய கமிஷனை நியமித்து, ஊழியர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தகவல் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த 8வந்து ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.