ரூ.1000 உரிமைத்தொகை பெறுவோருக்கான அருமையான திட்டம் – உடனே சேருங்க!!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்காக புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இது வரையிலும், 3 மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்காக ஊட்டியில் மலையரசி தொடர் வைப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (நவ.24) மூன்று மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!
ஒவ்வொரு மாதமும் பெறப்படும் ரூ.1000 உரிமைத்தொகையை இந்த திட்டத்தின் கீழ் மகளிர் சேமிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆண்டு கால சேமிப்பிற்கு 7.5% வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தொகையை சேமிக்க விரும்பும் குடும்ப தலைவிகள் அரசு வழங்கும் உரிமைத்தொகையை மலையரசி தொடர் வைப்பு திட்டத்தின் கீழ் செலுத்தி பயன் பெறலாம் என இத்திட்டம் துவங்கப்பட்டது.