அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்திற்கு Danger தான் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!!
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கை குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் இன்று தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் வட தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அறிக்கையில் இன்று முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் அதீத கனமழையும், சென்னை,திருவள்ளூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
நீங்க FD கணக்கு வைத்துள்ளீர்களா? உங்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. 9% வரை வட்டி… விவரம் இதோ!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதே போல் நாளையும் (10.12.2022) தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, ஈரோடு, நீலகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.