தமிழகத்தில் இன்று (நவ.7) காய்கறி விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காய்கறி விலையானது சற்று அதிகரித்துள்ளது. அதன் படி இன்று (நவ.7) விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
காய்கறி விலை
தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் காய்கறி விலையானது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம். இன்று (நவ. 7) அவரைக்காய் ரூ. 50க்கும், பீன்ஸ் ரூ. 60க்கும், பீட்ரூட் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கத்திரிக்காய் ரூ. 15க்கும், முட்டைகோஸ் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – சவரன் ரூ.45,360க்கு விற்பனை!!
மேலும் குடைமிளகாய் ரூ.30க்கும், கேரட் ரூ.35க்கும், சவ் சவ் ரூ.20க்கும் தேங்காய் ரூ.45க்கும், முருங்கைக்காய் ரூ.90க்கும், பூண்டு ரூ. 169க்கும், இஞ்சி ரூ.200க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும், சின்ன வெங்காயம் ரூ.110க்கும், உருளைக்கிழங்கு ரூ.30க்கும், தக்காளி ரூ.30க்கும், பூசணி ரூ.25க்கும், முள்ளங்கி ரூ.30க்கும், சேனைக்கிழங்கு ரூ.40க்கும், சேப்பங்கிழங்கு ரூ45க்கும் விற்பனை செய்யப்படுகிறது.