தமிழகத்தில் கனமழை காரணமாக காய்கறி விலையானது சற்று உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விலை நிலவரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வணங்கி வருகிறது. இந்நிலையில் மழையால் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 70க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.30க்கும், பீட்ரூட் ரூ. 40க்கும், பாகற்காய் ரூ. 45க்கும்,கத்திரிக்காய் ரூ. 50க்கும், முட்டைகோஸ் ரூ.12க்கும், கேரட் ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, காலிபிளவர் ரூ. 20க்கும், சவ் சவ் ரூ. 15க்கும், தேங்காய் ரூ.25க்கும், வெள்ளரிக்காய் ரூ.12க்கும், முருங்கைக்காய் ரூ.110க்கும், பூண்டு ரூ.180க்கும் , கோவைக்காய் ரூ.40க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், மாங்காய் ரூ.150க்கும், பெரிய வெங்காயம் ரூ. 65க்கும், சின்ன வெங்காயம் ரூ.50க்கும், உருளைக்கிழங்கு ரூ.60க்கும், தக்காளி ரூ.33க்கும், வாழைப்பூ ரூ.25க்கும், வாழைத்தண்டு ரூ. 20க்கும், பூசணி ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.