தமிழகத்தில் திடீரென அதிகரித்த தக்காளி விலை.. ரூ. 100க்கு விற்பனை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் திடீரென அதிகரித்த தக்காளி விலை.. ரூ. 100க்கு விற்பனை - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் திடீரென அதிகரித்த தக்காளி விலை.. ரூ. 100க்கு விற்பனை - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் திடீரென அதிகரித்த தக்காளி விலை.. ரூ. 100க்கு விற்பனை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அன்றாட பொருள்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து வருவதால் அதன் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒரு நாளைக்கு 1200 டன் தக்காளி தேவைப்படும். ஆனால் தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் 700 டன் மட்டுமே வருகிறது.

மதுரை கலைஞர் நூலகம் ஜூலை 15 ஆம் தேதி திறப்பு – ஏற்பாடு தீவிரம்!

அதனால் நேற்று வரை கோயம்பேடு சந்தையில் ரூ. 80 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் குறைவாக இருக்கிறது. அதனால் 2 நாட்களில் தக்காளி விலை ரூ. 60 உயர்ந்துள்ளது. மேலும் பீன்ஸ் விலை ரூ. 120 ஆகவும், இஞ்சி ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கிடங்கு இல்லாமல் இருப்பதால் குறைந்த அளவில் காய்கறிகள் வரவழைக்கப்படுவதாகவும், இதுவும் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!