தமிழகத்தில் இந்த பகுதியில் 144 தடை நீக்கம் – காரணம் இதுவா? முழு விவரம்!
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ‘அரிக்கொம்பன்’ யானை புகுந்ததால் அதனால் அந்த பகுதியில் 144 தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது யானை பிடிபட்டதை தொடர்ந்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
144 தடை
தமிழகத்தில் தேனி மாவட்டம் பகுதியில் ‘அரிக்கொம்பன்’ யானை அட்டகாசம் செய்து வந்த நிலையில், அதனை பிடிக்க கடந்த மாதம் 28 ஆம் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் வெளியானது.
Air Asia-வில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!
அதனை தொடர்நது கம்பம் அருகே சண்முகா அணையில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து யானையை வனத்துறையினர் பிடித்தனர். மேலும் அந்த யானையை லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. யானை அட்டகாசம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதியில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.