தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வயது வரம்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுகளில் வயது வரம்பு கட்டுப்பாடுகளை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகளில் வயது வரம்பை அமல்படுத்தியது போல ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான வயது வரம்பை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுவரை இந்த தேர்வுகளில் வயது வரம்பு இல்லாமல் இருந்தது. 57 வயது நிரம்பிய கல்வித்தகுதியுடன் உள்ளவர்கள் தேர்வு எழுதலாம் என இருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் பொதுப்பிரிவினர் தவிர மற்ற பிரிவு வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பட்டியலின, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூல் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
இந்நிலையில் மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு வயது வரம்பு எதுவும் இல்லாமல் இதுவரை இருந்தது. ஆனால் தற்போது அதற்கும் வயது வரம்பு அறிவிக்க பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள் மட்டுமே பணி – அரசாணையை ரத்து செய்ய வழக்கு!!
இதன்படி பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40 ஆகவும் SC, ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றவற்றிற்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் 40 வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது. இந்நிலையில் மத்திய அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் செட் தேர்வுக்கு எந்த வயது வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
இதற்கு எங்களுக்கு விசத்தை கொடுத்து கொண்றுவிடுவது நல்லது