பட்டியலின, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூல் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
தனியார் கல்லூரிகள் பட்டியலின, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
பட்டியலின, பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்களை கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் போட்டித் தேர்வுகள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணங்களில் விலக்கு அல்லது குறிப்பிட்ட அளவு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனை முறையாக பின்பற்றுமாறும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பட்டியலின, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
அரசுத்துறைகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு வழக்கு – நீதிமன்றம் தள்ளுபடி!!
எனவே இதனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், பட்டியலின, பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசும், தனியார் கல்லூரியும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்