தமிழக ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள் மட்டுமே பணி – அரசாணையை ரத்து செய்ய வழக்கு!!
ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள்கள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊர்க்காவல் படை:
தமிழகம் முழுவதும் 16,620 பேர் ஊர்க்காவல் படையில் உள்ளனர். இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களில் பாதுகாப்பு பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்களை ஓட்டும் பணி போன்றவற்றை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பணி நாட்களை அதிகரிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள் மட்டுமே வேலை என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாற்றியமைக்க வாய்ப்பில்லை – கல்வித்துறை அறிவிப்பு!!
வழக்கின் விவரம்:
அந்த பொதுநல வழக்கில், ஊர்க்காவல் படையினருக்கு மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பணி என்ற அரசாணை இருந்தாலும் அவர்கள் மாதம் முழுவதுமே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் 10 நாட்களுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டு வெளியான அரசாணையின் படி, 4 மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ரூ.280ம், 4 முதல் 8 மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ரூ.560 ஊதியம் மட்டுமே வழங்கப்படும்.
அரசாணை ரத்து:
மிகவும் குறைவான ஊதியம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுவதால், மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாதம் முழுவதுக்குமான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பாக தமிழக அரசு 10 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்