தமிழகத்தில் ஏப்ரல் 21 & மே 1ல் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 21 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வெளியான அறிவிப்பு
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏப்ரல் 21 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி மே தினம் என்பதால் விடுமுறை என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெளியான அறிவிப்பில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை சேர்ந்த பார்கள், கிளப்களை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் என அனைத்தும் மூடப்படும்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மஹாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களில் கண்டிப்பாக மூடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை மீறி மதுபானம் விற்பனை செய்தால், மதுபானம் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.