தமிழகத்தில் ஜூன் மாதம் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் முழுவதும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று அரசு தேர்வுத்துறை சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மே 3 முதல் 21ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரயில்வே காலிப்பணி இடங்கள் நிரப்புதல் – டிஆர்இயூ கோரிக்கை!!
தற்போது 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்கிற கேள்வி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அதாவது நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை அவர்கள் எழுத உள்ளதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜூன் மாதத்தில் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் தாமதமாக தொடங்கி உள்ள காரணத்தால், கல்வி ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதலால், 10, 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், மே இறுதி வாரத்தில் பொதுத்தேர்வு தொடங்கப்பட்டு, ஜூன் 2ம் வாரத்தில் முடிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்