பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.. அனைத்து சான்றிதழ்களும் ஒரே இடத்தில் – அரசு ஏற்பாடு!

0
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.. அனைத்து சான்றிதழ்களும் ஒரே இடத்தில் - அரசு ஏற்பாடு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு இருப்பது போல, மற்ற சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஏற்பாடு

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணமாக ஆதார் இருக்கிறது. அரசின் சலுகைகள் கிடைக்க ஆதார் அவசியமாகும். அதனால் தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் 50 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் இசேவை மையம் போகாமல் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவனத்தில் ரூ.1,60,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

இந்த சிறப்பு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பெற்றோர்களின் வருமான சான்றிதழ் போன்றவை வழங்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதிகள் ஒரு மாத காலத்திற்குள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!