தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் எதிர்காலம் காரணமாக ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு முழுமையாக பாடங்களை நடத்த முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் ஜூலை 19க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
எனவே விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், தனியார் பள்ளிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
ஜூலை 18 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மணிப்பூர் அரசு உத்தரவு!
இறுதியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் ஜூலை 19 உடன் முடிவடைய உள்ள நிலையில், அதன் பின்னர் பல தளர்வுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இன்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்ட முடிவில் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.