தமிழகத்தில் ஜூலை 19க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தொடக்கத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் எவ்வித தளர்வுகளுடன் இன்றி ஊரடங்கு அமலானது. இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி 4 ஆயிரமாக தற்போது தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. எனவே ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
TCS நிறுவன அமெரிக்க கிளையில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய திட்டம்!
இதனால் மாநிலம் முழுவதும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. இதனை முறையாக கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் – அரசுக்கு கோரிக்கை!
இதற்கு பின்னர் ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு, கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட தளர்வுகளுடன் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.