ஜூலை 18 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மணிப்பூர் அரசு உத்தரவு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா டெல்டா வகை வைரஸ் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து ஜூலை 18 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா வகை வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வகை டெல்டா வைரஸால் இந்தியா, இங்கிலாந்து உட்பட 111 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் பாதிப்பு தற்போது மணிப்பூர் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுத்த மணிப்பூர் அரசு ஜூலை 18 ஆம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 19க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
‘கொரோனா பரவல் சங்கிலியை தகர்க்க கடுமையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூலை 18 ஆம் தேதி முதல் அடுத்த பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அறிவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று மணிப்பூர் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதற்கிடையில், முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி போடுவது மற்றும் கொரோனா பரிசோதனைக்காக மட்டும் வெளியே வரும் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 1,104 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 17 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.