தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பு – தொடக்க கல்வி இயக்குனர்!!
தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்த கொரோனாவால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக் குறியான நிலையில் உள்ளது. பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர். ஏழை, எளிய மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் அவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்ள முடிவதில்லை.
மத்திய கல்வி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி – கொரோனா தொற்றா?
தற்போது பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு இன்று (ஜூன் மாதம்) முதல் தொடங்கவுள்ளது. அதே நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. காய்கறி கடைகள் உட்பட எந்த கடைகளும் செயல்பட அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் ஊரடங்கு இருந்த போதும் திட்டமிட்டபடி ஜூன் மாதம் ஆன்லைனில் வகுப்புகள் துவங்கின. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ், எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது என தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் புதிய கல்வி ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, எந்தவித வழிகாட்டலும் இன்னும் வழங்கப்படவில்லை. தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கையில் கூறியுள்ளார்.