மத்திய கல்வி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி – கொரோனா தொற்றா?
மத்திய கல்வி அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் அவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து பல தரப்பு மக்கள், முக்கிய அதிகாரிகள், மாநில முதல்வர்கள், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் போன்றவர்களை கடுமையாக பாதித்து வருகிறது. தற்போது இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
மருத்துவமனையில் இவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக இவர் தொற்றில் இருந்து மீண்டு தனது பணிக்கு திரும்பினார். இந்நிலையில் அவர் தற்போது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்கள் மத்தியில் பெரும் எய்திர்பார்ப்பு எழுந்திருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அனைவரிடமும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கு மீண்டும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் மருத்துவர்களின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.