தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று (நவ. 3) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று ( நவ. 3) 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தற்போது பெய்து வரும் கனமழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல சாலைகளில் வெள்ளநீர் பெருகி இருக்கிறது.
அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 6 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் இன்று டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..அது மட்டுமில்லாமல் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.