தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு – செப்டம்பர் 21 முதல் தொடக்கம்!!

0
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு - செப்டம்பர் 21 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு - செப்டம்பர் 21 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு – செப்டம்பர் 21 முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தனித்தேர்வு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வு மற்றும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாக அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும், தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தக்கோரி தமிழக அரசிடம் அரசு தேர்வுகள் இயக்ககம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

எழுத்தறிவு இயக்கத்தில் பயில்வோருக்கு சிறப்பு தேர்வு – பிப்ரவரி 28 நடைபெறுகிறது!!

இதன்படி 10 ஆம் வகுப்பு தேர்வுகள் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டு 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. 11 ஆம் வகுப்பு தேர்வுகள் செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு தொடங்கப்பட்டு அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு தேர்வுகள் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டு 28 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரியவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பில் சிறந்த மாநிலம் தமிழகம் – முதல்வர் புகழாரம்!!

இது குறித்து தலைமை செயலாளர் வெளியிட்ட அரசாணையின் படி, “தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேர்வு அறை சிறியதாக இருந்தால் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரவைக்க வேண்டும். பெரிய அறையாக இருந்தால் 20 மாணவர்கள் வரை அனுமதிக்கலாம்.

ஆன்லைனில் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – பள்ளிகள் கோரிக்கை!!

கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி அறை வழங்கப்பட வேண்டும். மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!