ஆன்லைனில் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – பள்ளிகள் கோரிக்கை!!
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள்:
கேரளாவில் உள்ள பெருன்பான்மையான பள்ளிகள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடத்த அட்டவணை வெளியிட்டுள்ளன. சில பள்ளிகள் அரசு சார்பில் இந்த தேர்வுகள் குறித்து தெரிவிக்கப்படும் என தேர்வுக்கான அட்டவணை வெளியிடாமல் உள்ளன. மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, “நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தலாம்” என தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் நேரடி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் தேர்வு குறித்து காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது திறந்துள்ளதால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!!
இதனை சரி செய்து நேரடி தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நிலைமை சரியானதும் பள்ளிகள் திறந்ததும் நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்