எழுத்தறிவு இயக்கத்தில் பயில்வோருக்கு சிறப்பு தேர்வு – பிப்ரவரி 28 நடைபெறுகிறது!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் எழுத்தறிவு இயக்ககம் சார்பில் கல்வி பயின்று வருபவர்களுக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தறிவு இயக்கம் தேர்வு:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் சிறப்பு எழுத்தறிவு இயக்ககம் சார்பில் 6 மாதங்களாக வயது வந்தோருக்கான கல்வி கற்கும் திட்டத்தின் மூலமாக 3150 பேர் பயின்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 63 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பில் சிறந்த மாநிலம் தமிழகம் – முதல்வர் புகழாரம்!!
இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் குறித்து கமுதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சன் சுகுமார், சூசை மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்