இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலில் நான்காம் இடம் பிடித்த தமிழகம் – ரூ. 8,551 கோடி வசூல்!
நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உள்நாட்டு தேவைகள் அதிகரித்து வருகிறது. அதனால் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி வசூல் 2022 நவம்பரில் 8,551 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல்
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி ) அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 32,651 கோடியாகவும், மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 77,103 கோடியாக இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதில் தமிழகத்தில் மட்டும் 8,551 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூலை விட 10 சதவிகிதம் அதிகம். இது குறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.8,637 கோடி ரூபாய் மற்றும் அக்டோபரில் ரூ. 9,540 கோடி ரூபாய் வசூலாகி இருக்கும் நிலையில் தற்போது நவம்பரில் ரூ. 8,551 கோடி வசூலாகி இருக்கிறது.
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – ஓராண்டு கால சேவை கட்டாயம்… முதல்வர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் நாட்டின் ஜிஎஸ்டி வருவாயில் தமிழகம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 172 கோடியில் இருந்து 22 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ. 209 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.