தமிழகத்தில் இன்று (பிப்.14) இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை கொடுத்த அலர்ட்!

0
தமிழகத்தில் இன்று (பிப்.14) இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை கொடுத்த அலர்ட்!

தமிழகத்தில் இன்று (பிப்.14) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (பிப்.14) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏனைய வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

ICSIL ஆணையத்தில் ரூ.37,230/- ஊதியத்தில் வேலை – B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் || உடனே விரையுங்கள்!

அதே போல பிப். 15ஆம் தேதி முதல் பிப்.20 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!