தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பு சலுகை:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளியில் பணியாற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசின் சார்பாகவே முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
UPSC ஆணையத்தில் Assistant Director வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
இந்த அரசின் புதிய திட்டத்தின் மூலமாக 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்படும். அதாவது, ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ரூ.1000 வீதம் நிதி ஒதுக்கி இதற்கான செலவினத்தை தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளும்படி தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.