தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
மன்னர் வளைகுடா பகுதியில் ஒரு வளிமண்டலக் கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருகிறது. அதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 16) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்த வெளியான அறிவிப்பில் தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை ,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.