சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக் – முழு விவரங்கள் இதோ!
சிலிண்டர் லோடு இறக்குவதற்கான கூலி ரூ.600-லிருந்து ரூ.950 ஆக உயர்ந்தது எதிர்த்து லாரி ஸ்டிரைக் செய்யப்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக்:
தமிழகத்தில் தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்குவதற்கான கூலி ரூ.600-லிருந்து ரூ.950 ஆக உயர்ந்தது எதிர்த்து லாரி ஸ்டிரைக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக விநியோகஸ்தர்கள் ₹600 வாங்கி வந்த நிலையில், தற்போது ₹950 வசூலிக்கின்றனர். ஆனால், விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி மிக குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை – வானிலை மையம் அறிக்கை!
அதேபோல், சிலிண்டர் மூடிகள் மிஸ்சிங் என மாதந்தோறும் ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடம் ₹3 ஆயிரம் வரை பிடித்தம் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளனர். எனவே இவ்வாறு தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி ஸ்டிரைக் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பிளாண்ட்களில் இருந்து சிலிண்டர் சப்ளை மேற்கொள்வது, 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஓரிரு நாளில் பாரத் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.