தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1500 ரொக்கம் – அரசிடம் கோரிக்கை!

0

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1500 ரொக்கம் – அரசிடம் கோரிக்கை!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1500 வழங்க வேண்டும் என தமாகா தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

பொங்கல் பரிசு

தமிழக மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கமும், கரும்பும் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் பரிசு குறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடக்கம் – கல்வித்துறை உத்தரவு!

அதில், இந்த ஆண்டு தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பில் குறைந்தபட்சம் ரூ. 1500, முழு கரும்பு அவசியம் இடம் பெற வேண்டும். குறிப்பாக இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்ட பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள் பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு பொங்கல் தொகுப்பை கூடுதலாக வழங்கவேண்டும். மேலும் கரும்பு கட்டாயம் வழங்க வேண்டும் எனவும், அதனை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!