தமிழகத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடக்கம் – கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்தப்படவில்லை. இவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த தகவல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரையாண்டு தேர்வுகள்:
டிசம்பர் மாதத்தின் தொடக்கப்பகுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு 13ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 13ம் தேதி தேர்வுகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தென் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான பொங்கல் விடுமுறையில் குழப்பம்? – அரசின் திட்டம் என்ன!!
அதே நேரம், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதியான இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்கி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.