தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!!
காவல்துறையில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான மிகப்பெரிய விருதான குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த பதக்கம் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சிறந்த விருது:
தமிழக காவல்துறை சார்பில் வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்த காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டு காவல்துறையின் உயரிய விருதான ‘குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்’ ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி பி.மணிகண்டகுமார், மற்றும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர்க்கு வழங்கப்பட உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ‘வினா வங்கி’ வழங்க ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இதற்கு முன் 1994 ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கான போலீஸ் பதக்கமும், சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கமும், கடமைக்கான சிறந்த பக்திக்கான முதலமைச்சரின் பதக்கம் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு மற்றும் சந்தோஷ் குமார் என இந்திய காவல் பதக்கம் 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்