தமிழகத்தில் மே 15 முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் பதில்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில் மே 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தமிழக அரசு பதில்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் – ஆன்லைனில் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!!
இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் ஆக்சிஜன் உற்பத்தி குறித்தும் பேசினார். தமிழகத்தில் முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும். அதனால் இனி வரும் வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு மே 15 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலைகள் மூலமாக 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் கொரோனா பரவல் குறையாமல் இருந்தால் 700 முதல் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனவும், அதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டி.ஆர்.டி.ஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் ஆக்சிஜன் உற்பத்தி, தடுப்பூசிகள், படுக்கை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.