தமிழகத்தில் மருத்துவ கல்லூரி டீன்கள் 8 பேர் இடமாற்றம் – சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!!
தமிழகத்தில் மதுரை உட்பட 8 அரசு மருத்துவ கல்லூரியின் டீன்களை இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
டீன்கள் இடமாற்றம்:
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நிவாரண நிதியாக 2000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூலம் தற்போது பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகிறார்கள். அத்துடன் நில்லாது தமிழக அரசு பல உயர் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள், 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
இந்த நிலையில் மருத்துவத் துறையிலும் தற்போது பணி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி மதுரை, விருதுநகர் உட்பட 8 அரசு மருத்துவ கல்லூரியின் டீன்களை இடமாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு: சாந்தி மலர் என்பவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீனாகவும், சங்குமணி என்பவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீனாகவும், ரத்தினவேல் என்பவர் மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
N Job “FB Group” Join Now
தொடர்ந்து முருகேசன் என்பவர் திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாகவும், வள்ளி சத்தியமூர்த்தி என்பவர் குமாரமங்கலம் மருத்துவகல்லூரி டீனாகவும், சுகந்தி ராஜகுமாரி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாகவும், திருவாசகமணி கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீனாகவும், வள்ளி சத்தியமூர்த்தி என்பவர் சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வசந்தாமணி என்பவர் மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.