தமிழக பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை.. விரைவில் நல்ல செய்தி – வெளியான தகவல்!
தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை திட்டம் மூலம் ஒரு கோடிக்கு அதிகமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் அடுத்தடுத்து சில நல்ல செய்திகள் வர இருக்கிறது.
உரிமை தொகை
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த ஒரு கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு கோடியை 67 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உரிமைத்தொகை பெற்றனர்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 குறைவு – நிம்மதிகள் மக்கள்
பின் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளியாக இருக்கின்றனர். இந்நிலையில் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து தகுதிகள் இருந்தும் ரூ.1000 கிடைக்கவில்லை என்று பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உரிமைத் தொகை பெற விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்து வருகிறார். அதாவது விண்ணப்பித்த ஒரு கோடி 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை தேர்தலுக்கு பின் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.