தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம்? இன்று 1,243 பேருக்கு கொரோனா உறுதி!!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் மூழ்கி உள்ளனர். இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களாக குறைந்த அளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வீரியம் எடுக்க தொடங்கி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்க உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
இதனால் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்குமாறும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை போன்று மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு விடுமோ? என மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,65,693 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் பலியானதால், மொத்த பலி எண்ணிக்கை 12,590 ஆக அதிகரித்துள்ளது. இன்று வரை 8,45,812 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்