தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

0
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மார்ச் 22ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரியில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அந்த கல்லூரி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் எதிர்பார்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் கல்லூரிகளில் பெரிதளவில் கொரோனா பரவல் உறுதி செய்யப்படாத காரணத்தால் பிப்ரவரி 8ம் தேதி முதல் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைனில் இல்லை – தேர்வு வாரியம் அறிவிப்பு!!

இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. அங்கு மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அம்மாவட்டம் முழுவதும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்ட பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மார்ச் 28 வரை அரசு கல்லூரிக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!!

இதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு வரும் மார்ச் 22ம் தேதி முதல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளது. 12ம் வகுப்பிற்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனையடுத்து அந்த கல்லூரி விடுதியில் பயிலும் 400 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கல்லூரிகளிலும் தொற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. எனவே கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!