தமிழகத்தில் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு – பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தியாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களின் ஓய்வு வயது:
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பகுதிநேரமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், மேலும் சில கோரிக்கைகள் தமிழக அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாமக்கல் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கை – விண்ணப்ப பதிவு துவக்கம்!!
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து, பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வு போன்றவற்றிற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறப்பு – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி அரசு ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழு நிலுவைத் தொகையை 21 மாதங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ள நிலையில், மாநில அரசும் அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்