பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறப்பு – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித்துறை உதவித்தொகை அதிகரிப்பு – ஆளுநர் அறிவிப்பு!!
பின்னர் நோய்ப்பரவல் குறைந்த காரணத்தால் உலக நாடுகள் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய தொடங்கின. இந்தியாவிலும் மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கை – விண்ணப்ப பதிவு துவக்கம்!!
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் எனவும், தொலைதூரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்வியை ஆண்டு இறுதி வரை தொடரலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்