தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணத்துடன் ரூ.1000 பொங்கல் பரிசு – முதல்வர் ஆலோசனை!
தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், ஏழை மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கமும் வழங்கப்படும். அதன் படி, 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், தென் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.
TNPSC குரூப் 2 தேர்வுக்கு எப்படி தயாராகலாம்? – முழு விவரம் உள்ளே!
இது தவிர, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, சேதங்களைச் சீா்செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். இப்படி, வெள்ள நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை என இரண்டும் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், ரொக்கத்தொகை 1000 ரூபாய் வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.