தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – தன்னார்வலர்களுக்கு நிம்மதி!!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு இ-பதிவு செய்து கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்களுக்கு இ-பதிவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ – பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இறப்பு, மருத்துவ உதவி போன்றவற்றிற்கு மட்டும் இ – பதிவு வழங்கப்படுகிறது. இணையதளம் மூலமாக உரிய ஆவணங்களை கொண்டு சரியான காரணத்தை பதிவிட்டு இ-பதிவு பெறலாம். இதன் மூலம் தேவையற்ற காரணங்களுக்காக மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க முடிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு கணக்கீடு – ஜே.சி.எம் அறிவிப்பு!!
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியில் வர அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் முதல் இந்த இ-பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால் மீண்டும் இ-பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொது இ-பதிவில் புதிய வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதில் தனிநபர் என்கிற பிரிவில் பயணத்திற்கான காரணமாக இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களை தொடர்ந்து இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள் / தன்னார்வலர்களுக்கு இ-பதிவு செய்து கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் பல தன்னார்வலர்களால் நாள்தோறும் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். உதவும் எண்ணம் கொண்ட பல தன்னார்வலர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.