மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு கணக்கீடு – ஜே.சி.எம் அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மூன்று தவணைகளாக நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான கணக்கீடு குறித்து ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் பணியாளர் பக்கச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் அனுராக் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். DA உயர்வினால் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மற்றும் கிராச்சுட்டி போன்றவையும் உயரும். வரி மற்றும் முதலீட்டு வல்லுநர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதி, DA உயர்வினால் ஊழியர்களின் மாத சம்பளம் உயரும் என்று கூறியுள்ளனர்.
இன்று முதல் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – ஜூன் 9 வரை முழு ஊரடங்கு!
தற்போது 17% ஆக உள்ள அவர்களின் அகவிலைப்படியானது 28% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஜிதேந்திர சோலங்கி அவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் கிராவிட்டியானது அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்று கூறியுள்ளார். ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் பணியாளர் பக்கச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா அவர்கள், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1, 2021 ஜனவரி ஆகிய மூன்று தவணைகளுக்கு முறையே 3%, 4% மற்றும் 4% ஆக நிர்ணயிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
அகவிலைப்படியானது நாட்டின் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆக 11% DA நிகர உயர்வானது 17% பழைய DA உடன் இணைந்து 28% ஆக நிர்ணயிக்கப்படும் என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.