தமிழக அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் – நிதி ஒதுக்கீடு!!
தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் வரவு செலவு திட்ட (பட்ஜெட்) நிதி ஒதுக்கீடு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
ஊதியம் வழங்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 234 தொகுதிகளில் நடைபெற்றது. இதற்கான பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டது. எனவே அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்குவதற்கு வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அனுமதி!!
பள்ளிக்கல்வி நிதி கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டு உள்ள செயல்முறைகளின் படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கல்வி மாவட்ட அளவில் இப்பணிகள் நிறைவு பெற்றதற்கான அறிக்கையினை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.