தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அனுமதி!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. படிப்படியாக நோய்த்தொற்று குறைந்து வந்த காரணத்தினால் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மாத இறுதியில் நடப்பு கல்வி ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. தற்போது அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களை கற்று வருகின்றனர்.
சென்னை மேம்பாட்டு ஆணையத்தில் 131 பணியிட நியமன முறையீடு – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
இந்நிலையில் இந்த கல்வியாண்டு முடிவு பெற உள்ளதால் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு தேவையான பணிகளை செய்ய பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா காலம் என்றாலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வுகள் எப்போது??
இதற்காக அரசு பள்ளி ஊழியர்கள் தங்களது பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அந்த பகுதி மக்களிடையே தெரிவிக்க வேண்டும். அதன் மூலமாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் அனுமதி வழங்கப்பட்டதும் மாணவர் சேர்க்கைக்கு எமிஸ் தளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!!
அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
when will be Summer Holidays?