கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினர் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து எளிதாக பெற்றுக் கொள்ளும்படியாக புதிய வலைதளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் சான்றிதழ்:
தமிழகத்தில் பேருந்து டிக்கெட் பெறுவதில் இருந்து பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை பதிவு செய்வது வரையிலும் மொபைல் செயலியின் மூலமாகவே செய்து கொள்ளும்படியான வசதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சிறுபான்மையினர் அந்தஸ்து பெற கல்வி நிறுவனங்களும் இணையதள பக்கத்தின் மூலமாகவே விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசு துறையில் வேலை வேண்டுமா? – இதை மட்டும் பண்ணுங்க!
அதாவது, சிறுபான்மையினர் சான்றிதழை வழங்குவதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை மூலமாக உருவாக்கப்பட்ட வலைதளத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகவே எளிதாக பெற்றுக்கொள்ளும் படியாக வெளிப்படை தன்மையுடன் இந்த வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.